முற்றிலும் புதிய கலைஞர்கள் கூட்டணியில் உருவாகும் ‘சந்தோஷத்தில் கலவரம்’

முற்றிலும் புதியவர்களின் கூட்டணியில் ‘சந்தோஷத்தில் கலவரம்’ என்கிற படம் உருவாகி வருகிறது.
இப்படத்தைக் கிராந்தி பிரசாத்  இயக்குகிறார். இவர் பல விளம்பரப்படங்கள் , குறும்படங்களை இபக்கியவர்.  அவற்றுக்காக விருதுகளும் பெற்றவர் . திரைப்படக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற இவர் ,தெலுங்கில் சில இயக்குநர்களிடமும் திரைப்பாடம் பயின்றவர் . இருந்தாலும் படங்கள் பார்த்து கற்றவை அதிகம் . தமிழ்ப்படங்கள் நிறைய பார்த்து தமிழ் திரைச் சூழலை அறிந்து வைத்துள்ளார். இங்கே முகங்களை விட்டு விட்டு திறமைக்கு மட்டும்  தரப்படும்  மரியாதையை வைத்து  தமிழில் படம் இயக்க வந்திருக்கிறார் ‘
ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் ‘சந்தோஷத்தில் கலவரம் ‘என்கிற இப்படத்தை திம்மா ரெட்டி  வி.சி. தயாரிக்கிறார் .
“ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் கலவரம் நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்? என்பதே கதை. அதனால்தான் ‘தீமைக்கும் நன்மைக்கும்  இடையில் நடக்கும் மோதல்  ‘என்று   டைட்டிலுடன் டேக் லைன் போட்டுள்ளோம் இது சஸ்பென்ஸ் த்ரில்லர் ரகப்படம்  என்றாலும் இதில் நட்பு ,காதல் , அன்பு  , காமெடி , ஆன்மிகம் எல்லாம் கலந்துள்ளன.
உன்னையே நீ அறிவாய் உனக்குள் இருக்கும் இறைவன் உணர்வாய் , உன் உயரம் அறிவாய் என உரக்கச் சொல்கிறது படம்  “என்கிறார் இயக்குநர் கிராந்தி பிரசாத் .
நிரந்த் ,ருத்ரா அவ்ரா , ஆர்யன் , ஜெய் ஜெகநாத்  , ராகுல் சி .கல்யாண் , கெளதமி , செளஜன்யா , ஷிவானி ,அபேக்ஷா என இப்படத்தில்  புதுமுகங்கள் பலரும், ராவி மரியா வித்தியாசமான ரோலில்  நடித்துள்ளனர்.
படத்துக்கு ஒளிப்பதிவு பவுலியஸ் இவர் ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவர். இப்படத்துக்காக அமெரிக்காவிலிருந்து வந்து பணியாற்றியுள்ளார். இவருடன்ஷிரவன்குமார் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை சிவநக் , பாடல்கள் கபிலன்  மணி அமுதன் , ப்ரியன் ,எடிட்டிங் கிராந்தி குமார். ஒலிப்பதிவு அருண் வர்மா இவர். ஆஸ்கார் புகழ் ரசூல் பூக்குட்டியின் மாணவர் .
படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Leave a Response