தமிழர் அல்லாத கர்நாடகாவின் தூதுவர் ரஜினிகாந்த் என்பது இப்போதுதான் பட்டவர்த்தனமாக தெரிகிறது என்று பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் கடந்த 10 -ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின்போது போலீஸார் மீது சிலர் தாக்குதல் நடத்தியதை வன்முறையின் உச்சம் என்று ரஜினி தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து பாரதிராஜா அறிக்கை விட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் ஒரே குரலில் தனது உணர்வுகளை எதிரொலித்த இந்த நேரத்தில், நம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையும் அறவழியில் போராடியது.
அனால் நம் முதுகில் ஏறி உட்கந்துக்கொண்டு நம் மீது கதி வைத்து பதம் பார்க்க நினைக்கும் “ரஜினி”அவர்களின் சமீபத்தைய ட்விட்டர் பேச்சு.
நன் அவனை கேட்கிறேன் எது வன்முறையின் உச்சகட்டம் ரஜினி அவர்களே அறவழியில் போராடிய எம் தமிழர்கள் உங்களுக்கு வன்முறையாளர்களா? தமிழர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டார்கள் ,என்ற காள்புணர்ச்சியில் பேசும் பேச்சு இது.
தங்களுடைய திரைப்படம் வெளியாகும் பொது மட்டும் பூச்சாண்டி காட்டும் உங்களை போல ஒரு நடிகரை தமிழக திரை உலகம் சந்தித்ததே இல்லை.
தமிழ் நாட்டிலும் சரி உலக அளவிலும் சரி தமிழன் கொட்டிகொடுத்த பணத்தில் சேர்த்து வைத்த செல்வதில் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு என்ன செய்தீர்கள்.
இலங்கை தமிழரை கொன்று குவித்த பொது குரல் கொடுத்தீர்களா?
நியூட்ரினோ விற்கு எதிராக களத்தில் இறங்கி போராடினீர்களா?
இல்லை ஓர் அறிக்கையாவது விட்டேர்களா ?
மீத்தேல் பற்றி எதாவது வாய் திறந்தீர்களா?
எதற்கும் வாய் திறக்காத நீங்கள். இன்று காவிரிக்காக ஒன்று கூடிய தமிழர்களின் ஒற்றுமை உணர்வை வன்முறை கலாச்சாரம் “இதனை ஆரம்பத்திலேயே கிள்ளி ஏறிய வேண்டும் என்கிறீர்களே”
ஓ! இப்போது தான் பட்டவர்த்தனமாக தெரிகிறது. நீங்கள் தமிழர் அல்லாத கர்நாடகாவின் தூதுவன் என்று.
உங்கள் வேஷம் கொஞ்சம் கொஞ்சமாக கலைகிறது. ஒன்றை உணர்ந்து கொள்ளுங்கள்,காவிரி பிரச்சனை பற்றி எரிந்த போது, வெந்து செத்தது எங்கள் தமிழ் இனம்.சேதமடைந்தது எங்கள் தமிழர்களின் சொத்துக்கள்.
அங்குள்ள கலைஞர்களெல்லாம் ஒன்று கோடி எதிர் குரல் குடுத்த போதும், அங்குள்ள காவலர்கள் தமிழர்களை துரத்தி துரத்தி அடித்த போதும், தமிழ் நாடு பதிவு கொண்ட எத்தனை வாகங்கள் அடித்து நொறுக்கிய போதும்,வாகன ஓட்டிகளை நிர்வான படுத்தி அடித்த போதும், வாய் திறக்காத நீங்கள், இன்று தமிழ் நாட்டிலே இருந்து கொண்டு, தமிழரிடம் உறுஞ்சிய ரத்தத்தில் ராஜ வாழ்கையை வாழ்ந்து கொண்டு, எங்களையே வன்முறையாளர்கள் என்று பட்டம் சுமத்துகிறீர்கள்.
சீருடையில் இறந்தவரும் எங்கள் தமிழன்தான், எங்கோ கூடத்தில் அடையாளம் இல்லாத ஒருவன் அல்லது இந்த நிகழ்ச்சியை கறை படுத்த நினைத்த ஒருவன் ,செய்த செயலுக்கு நாங்கள் வருந்துகின்றோம்.
நீங்கள் எங்களுக்குள் சீண்டி விட வேண்டாம்
நடந்த போராட்டம் தனிமனிதனுக்கானது அல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்
உங்கள் வீடு சாப்பாட்டிற்கும் ,உங்கள் வீட்டு குடி தண்ணீருக்கும் சேர்த்து தான் எங்கள் வீரதமிழ் இளைஞர்கள் பலர் காவல்துறை நடத்திய அடி தடியில் ரத்தம் சிந்தினார்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
பேசும் போது எதை பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேசுங்கள்.
இல்லையென்றால் எம் தமிழ் மக்களால் நீங்கள் ஓரங்கட்டபடுவீர்கள், அந்த நாளும் வெகு தூரத்தில் இல்லை என்பதையும் நீங்கள் நன்கு உணர்வீர்கள், என்பதையும் சொல்லி கொள்ள நினைக்கிறன்.
இப்வராக பேசியுள்ளார் இயக்குனர்பாரதிராஜா..