கீரப்பாக்கம் பகுதி திமுக செயலாளர் ரமேஷ் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தீக்குளித்ததாக உறவினர்கள் கூறியுள்ளனர்.
தற்போது ரமேஷ் 70 சதவீத காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
காவிரி வாரியத்துக்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மைத்துனர் மகன் சரவணன் சுரேஷ் நேற்று விருதுநகரில் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
80 சதவீத தீக்காயங்களுடன் அவரை மீட்டு மதுரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது