காவிரி விவகாரம் குறித்து கருத்து சொன்ன பிரகாஷ்ராஜ்…

காவிரி விவகாரம் குறித்து பிரகாஷ் ராஜ் அளித்த பேட்டி

அவர் கூறியதாவது:

நம்முடைய நோக்கம் நதிகளுக்காக சண்டையிட்டுக் கொண்டு இருக்கக் கூடாது, பருவநிலை மாற்றத்தை வென்று, அதை இயல்புக்குக் கொண்டுவரும் முயற்சியில் இருக்க வேண்டும்.

எனக்குத் தெரியும் எந்தக் கட்சியும், காவிரி விவகாரத்தைத் தீர்க்கப்போவதில்லை. இந்த விவகாரத்தில் ஒவ்வொரு கட்சியும் அரசியல் செய்வார்கள். மிகப்பெரிய நைல் நதியை பல்வேறு நாடுகள் அமைதியாகப் பிரித்துக்கொண்டு, பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி இருக்கும்போது, காவிரி நதியை இரு மாநிலங்கள் சண்டையில்லாமல் பகிர்ந்து கொள்ள முடியாதா?.

மக்கள் நதிக்காக சண்டையிடுவதற்குப் பதிலாக, முறையாகத் திட்டமிட்டு, ஒன்றாகச் செயலாற்ற வேண்டும். காவிரி நதிநீர் படுகையில் சூழல் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. காடுகள் அழிக்கப்படுகின்றன. நதிப்படுகைகளில் ஆற்றுமணல் கொள்ளையடிக்கப்படுகிறது, நிலத்தடி நீர் ஊறுவதற்கு எந்தவிதமான வழியும் இல்லை.

இந்தச் சூழலில் நாம் காடுகளை அழிப்பதைத்தடுப்பதில் அதிகமான கவனம் செலுத்த வேண்டும், ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளப்படுவதைத் தடுக்க வேண்டும்.

இவ்வாறு நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.

Leave a Response