‘‘பிரதமர் பதவிக்குத்தான் தமிழருக்கு வாய்ப்பில்லை… துணவேந்தர் பதவிக்குமா?’’ – வைரமுத்து கேள்வி

இந்தியாவின் பிரதமர் பதவிக்குத்தான் ஒரு தமிழருக்கு வாய்ப்பில்லை. துணைவேந்தர் பதவிக்குமா என்று கவிஞர் வைரமுத்து பதவிட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தச் சூழலில் அண்ணா பல்கலைகழகத்துக்கு கர்நாடகவைச் சேர்ந்த சூரப்பாவை துணைவேந்தராக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்திருருக்கிறார்.

கர்நாடகத்தைச் சேர்ந்தவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், திரைப்பட நடிகர்கள் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘இந்தியாவின் பிரதமர் பதவிக்குத்தான் ஒரு தமிழருக்கு வாய்ப்பில்லை. துணைவேந்தர் பதவிக்குமா ஒரு தமிழருக்குத் தகுதியில்லை? இதுபோன்ற செயல்களெல்லாம் தமிழகத்தைத் தனிமைப்படுத்தவா? தனிப்படுத்தவா? ’’என்று பதிவிட்டுருக்கிறார்.

Leave a Response