அழகென்ற சொல்லுக்கு அமுதா – திரைவிமர்சனம்

கரைக்க, கரைக்க கல்லும் கரையும் என்பதற்கேற்ப, தன்னைபிடிக்காத நாயகிக்கு தன்னை பிடிக்க வைக்க நாயகர் செய்யும் விடாமுயற்சிகளே… இப்படதின் கரு

சாதாரண குடும்பத்து இளைஞரான நாயகர் முருகன் எனும் ரீஜன் , பிரபல நடிகரின் ரசிகர் மன்றத் தலைவர் , என்பது தவிர பெரிதாக வேலை வெட்டி இல்லாதவர். தன்னை  காதலிக்க மறுக்கும் கதாநாயகியை வழிக்கு கொண்டு வர படாத பாடு படுகிறார்.

கதாநாயகியும் போலீஸ் , டான் , நாயகரின் தந்தை …என ஏகப்பட்ட இடங்களில் புகார் செய்து , இவர் மீது காதல் இல்லை .என சொல்லி , நாயகரை தவிர்க்க படாதப் பாடுபடுகிறார். இறுதியில் நாயகரின் காதல் ஜெயித்ததா ? நாயகியின் விரட்டல் ஜெயித்ததா ? என்பது தான் “அழகென்ற சொல்லுக்கு அமுதா ” படத்தின் கதை மொத்தமும்.

“அவனவன் லவ் பெயிலியர்ன்னா ., சாப்பிடாம அதே எண்ணத்தோட இருப்பங் கண்ணு கேள்வி பட்டிருக்கேன் .இங்கு 40 இட்லி திங்குறே ” என்பதில் தொடங்கி ,
“எட்டு மணிக்கு மேல ஒரு ஆம்பள வீட்டுல இருந்தா ., அந்த வீடு உருப்புடாதுடா …” என்பது வரை  வேலை வெட்டி இல்லா நாயகரை கரிச்சுக் கொட்டும் அப்பாவாக பட்டிமன்றம் ராஜா படம் பார்க்கும் எல்லோரதுஅப்பாவையும அவரவர் கண் முன் நிறுத்துகிறார்.

போலீஸ் இன்ஸா’க மகாநதி சங்கர் , “அவன் ஹைட் சொன்ன வெயிட் சொன்ன …. பைட் பத்தி மட்டும் கொல்லலையேம்மா  ” என ஹீரோவிடம் அடி வாங்கி புலம்பும் டானாக வளவன் , மற்றும் பிற பாத்திரங்களில் ரேகா சுரேஷ் , ‘பிதாமகன்’ விச்சு , தாட்சாயினி , ‘போராளி” திலீபன் , மோனா , கலை, சக்திவேல் , சிவராஜ் , நிப்பு உள்ளிட்டோர் கச்சிதமாக நடித்திருக்கின்றனர். அதிலும் ,கலை உள்ளிட்டநாயகரின் நான்கு நண்பர்களும் கிடைத்த இடத்தில் எல்லாம் நச்-டச் நடிப்புக் கொடுத்து சிரிப்புக்கு பஞ்சம் இல்லாது பார்த்துக் கொள்கின்றனர் .

வசனங்கள் படத்திற்கு பலம் .அதே மாதிரி நாயகர் பார்க்க மிகவும் சுமாராகத் தெரிந்தாலும் .,ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு சீனிலும் ரசிகனின் மனம் கவருகிறார்

ரஜின் மகாதேவ் இசையில் ” நான்காயலான் கடை ஓட்ட ..” , “வியாசர்பாடி அண்ணன் கேடி ..”, “உசுற அடிச்சு நொறுக்கி …. ” , ” என் தேவதையோட கொலுசு சத்தம்…” உள்ளிட்ட பாடல்களும், பின்னணி இசையும் பேசப்படும் பிரமாதம்.

ஒம் பிரகாஷின் சண்டை பயிற்சி ,ஜெ கே வின்கலை இயக்கம் .கோபி கிருஷ்ணாவின் படத்தொகுப்பு ஜெ.கே . கல்யாண்ராமின்ஒளிப்பதிவு உள்ளிட்டவை படத்திற்கு பெரும் பலம்.

நாகராஜனின் எழுத்து ,இயக்கத்தில்.,
“நல்ல கவிதை சென்னா நம்பாதீங்க .. எவனாவது நாறக் கவிதை சொல்வான் நம்புங்க….” எனநாயகியை பார்த்து நாயகர் சமூக நடப்பை சொல்லும் இடத்தில் தொடங்கி., கதாநாயகி மீதான காதலை கைவிடும்படி சொல்லும் காவல் துறை அதிகாரியிடம், “நீங்க குற்றவாளிங்களை பிடித்து வந்து உண்மையை கொண்டு வர அவங்களை என்ன செய்வீங்க ? டார்ச்சர் பண்ணுவீங்கள்ள … அது மாதிரி , அமுதாகுள்ளே இருக்கிற என் மீதான ,லவ்வக் கொண்டு வர., நான் அவரை சுற்றி வந்து டார்ச்சர் தருகிறேன் ….” என்று நாயகர் லாஜிக்காக பேசுவது வரை., இப்பட இயக்குனரின் புத்திசாலிதனம் பேசும் காட்சிகள் ஏராளம் , ஏராளம்.

அதே மாதிரி யார் மனமும் பெரிதாக புண்படாதபடி தன் அபிமான நடிகர் படங்களில் பேசிய வசனங்களையே வாழ்க்கையாக கருதும் ஒரு சில ரசிகனின் அறியாமையையும் , இன்னும் சிலரின் தெளிவான பார்வை இல்லா சினிமா மோகத்தையும் ஆங்காங்கே நாசுக்காக சுட்டிக்காட்டியிருக்கும் விதமும் ரசனை!

மொத்தத்தில் “அழகென்ற சொல்லுக்கு அமுதா” திரைப்படம் காதலையும் காமெடியையும் மார்ச் 30 ல் மீண்டும் பரிசாற்றி இருக்கிறது..

Leave a Response