சாந்தனுவுக்கு ஜோடியா.? நடிக்கமாட்டேன் என்று கூறும் “சாய் பல்லவி”…!

இயக்குனர் மிஷ்கின் ‘துப்பறிவாளன்’ படத்தை அடுத்து தற்போது சாந்தனுவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.இந்தப் படத்தை .’லிப்ரா புரொடக்ஷன்ஸ்’ என்ற படநிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஸ்டிரைக் முடிந்ததும் துவங்குகிறது. இந்த செய்தி நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க தேர்வு நடைபெற்று வந்தது. நித்யா மேனன் இந்தப் படத்தில் ஒரு கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. படத்தின் கதையே கேட்காமலேயே பெரிய தொகையை சம்பளமாக கேட்டுள்ளார்.

அத்துடன் சாந்தனுவுக்கு ஜோடியாக நான் நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். உடனே இயக்குனர் மிஷ்கின், சாய் பல்லவி என் படத்துக்கு வேண்டாம் என்று கண்டிப்புடன் கூறிவிட்டாராம். நடிகை சாய் பல்லவி கேரக்டரில் நடிக்க நடிகை சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது கூறப்படுகிறது.

Leave a Response