தனியாா் பள்ளிகள் கட்டண நிா்ணயம் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு..!

தனியாா் பள்ளிகளுக்கான கட்டணத்தை ஏப்ரல் 30ம் தேதிக்குள் நிா்ணயித்து இணையத்தில் வெளியிடுமாறு தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தனியாா் பள்ளிகளில் அதிகப்படியான கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழும் நிலையில், ஹக்கீம் என்பவா் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் இது தொடா்பான மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், தனியாா் பள்ளிகளில் ஒரே மாதிாியான கட்டணத்தை நிா்ணயம் செய்து அரசு அதனை இணைய தளத்தில் வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

மேலும் தமிழகத்தில் உள்ள 10 ஆயிரம் தனியாா் பள்ளிகளில் 5 ஆயிரத்து 500 பள்ளிகளுக்கு மட்டுமே கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 ஆயிரத்து 500 பள்ளிகளுக்கான கட்டணங்கள் நிா்ணயம் செய்யப்படவில்லை. அவற்றை விரைந்து நிா்ணயம் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிரந்தது.

விசாரணை இறுதியில், வருகிற ஏப்ரல் 30ம் தேதிக்குள் அனைத்து தனியாா் பள்ளிகளுக்கான கல்வி கட்டண விவரத்தை தமிழக அரசு நிா்ணயம் செய்ய வேண்டும். மேலும் அவற்றை அதே தினத்தில் பள்ளிக்கல்வித் துறை இணையதள பக்கத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Response