இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்திற்கு மாற்றம்!

வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் மற்றும் 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில், வரும் நவம்பர் 1ம் தேதி கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஒரு நாள் போட்டி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. ஆனால், கொச்சி மைதானம் உலக தரம் வாய்ந்த கால்பந்து மைதானமாக மாறி வருகிறது.

அங்கு ஜூனியர் உலகக் கோப்பை கால்பந்து மற்றும் ஐஎஸ்.எல். கால்பந்து போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில், அந்த மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடத்தினால், மைதானம் சேதம் அடையும் நிலை உருவாகும். இதன் காரணமாக போட்டியை கொச்சியில் உள்ள வேறொரு மைதானத்திற்கு மாற்ற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கோரிக்கை விடுத்திருந்தார்.
tendulkar-7591
இவரது கோரிக்கையை ஏற்று இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒரு நாள் போட்டி திருவனந்தபுரத்திற்கு மாற்ற கேரளா மாநில கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. கேரள மாநிலத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் மொய்தீன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Leave a Response