சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இன்று துவக்கம் !

லோக்பால் மசோதா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று  டில்லியில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை துவக்குகிறார்.

லோக்பால் மசோதா, லோக் ஆயுக்தா, தேர்தல் சீர்திருத்தம் ஆகிய மூன்றையும் வலியுறுத்தி, இன்று முதல் டில்லியில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க உள்ளதாக அன்னா ஹசாரே தெரிவித்திருந்தார்.

முன்னதாக கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரலில் ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் வகையில் லோக்பால் அமைப்பை கொண்டுவர வலியுறுத்தி டில்லி ராம்லீலா மைதானத்தில் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். மத்திய அரசு லோக்பாலுக்கு உறுதி அளித்ததையடுத்து அவர் தனது போராட்டத்தை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Response