குரோம்பேட்டை பாலசுப்ரமண்ய சுவாமிக்கு பங்குனி உத்திர விழா துவக்கம் !

murugan

குரோம்பேட்டையில் குமரன்குன்றம் மலைக்கோவிலில் அருள்மிகு பாலசுப்ரமண்யசுவாமிக்கு இன்று காலை 9.00 மணிக்கு பங்குனி உத்திர பிரம்மோத்ஸவம் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

மார்ச் 21 முதல் மார்ச் 30 வரை பிரதி தினமும் காலை மாலை இருவேளைகளும் விசேஷ யாகசாலை பூஜை ஹோமங்களும் வேத பாராயணம் தேவார இன்னிசை கச்சேரிகளும் நடைபெறும்.

20.03.18 காலை 11.00 மணிக்கு திரு வள்ளி சமேத சங்கு சக்ர சண்முகருக்கு ஐஸ்வர்ய சண்முகர் திரு தேவசேனா திருக்கல்யாணம் நடைபெறும்.

30.03.18 பகல் 12.00 மணிக்கு அவரோகணம்

31.03.18 பகல் 11.00 மணிக்கு திரு வள்ளி சமேத சங்கு சக்ர ஐஸ்வர்ய சண்முகருக்கு திரு வள்ளி திருக்கல்யாணம் நடைபெறும்.

01.04.18 பகல் 12.00 மணிக்கு திரு இடும்பன் பூஜை விடையாற்றி உற்சவம் நடைபெறும்.

Leave a Response