செங்கல் சைக்கோ போல கடித்து கொலை செய்யும் சைக்கோ ஆந்திராவில் கைது !

munu

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சைக்கோ கொலைக்காரன் முனுசாமி. கடந்த 1992ஆம் ஆண்டு முதல் திருடனாக பிழைப்பு நடத்தி வருகிறான். இதனால் அடிக்கடி சிறைக்கு சென்று, பெயிலில் வந்து மீண்டும் திருடுவான்.

இவன் தன் கைவரிசையை அதிகம் காட்டியது ஆந்திராவில் தான். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், மனநலம் சரியில்லாமல் போனது.

இதன் காரணமாக வீட்டில் தனியாக இருப்பவர்களை கடித்து கொலை செய்து, அங்கு சாப்பிட்டு விட்டு சென்று விடுவான். கடந்த ஆண்டில் மட்டும் குழந்தைகள், பெண்கள் உட்பட 8 கொலைகள் செய்துள்ளான்.

இதற்கு இவன் காரணமாக கூறுவது ரூ.200 கொடுக்கவில்லை, பேச செல்போன் அளிக்கவில்லை என்பது தான். இவனது திருட்டில் பணம், உணவு தான் பிரதானம்.

எப்போதும் நகைகளில் கைவைப்பதில்லை. இந்நிலையில் ஆந்திராவில் நடந்த தம்பதிகளின் கொலை ஒன்றில் கிடைத்த கைரேகையை கொண்டு, முனுசாமியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Leave a Response