ஒரு லட்சம் ரூபாய்க்கு குழந்தை விற்பனை.. தமிழக அரசுக்கு நோட்டீஸ்..

nhrcdelhi

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், பிறந்து நான்கே நாளான தனது குழந்தையை தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தை சேர்ந்த பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்றதாக சமீபத்தில் பிரபல ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. தமிழகத்தில் உள்ள தம்பதியருக்கு கேரளாவை சேர்ந்த ஒரு பெண் தனது குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தது தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவ்விவகாரத்தை தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரிக்க தொடங்கியுள்ளது.

Leave a Response