*சென்னை அணி வெற்றி

ஐ.எஸ்.எல்., தொடரில் சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில், புனே அணியை வென்றது.

chennai fc

இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் நான்காவது ‘சீசன்’ தற்போது நடக்கிறது. நேற்று சென்னையில் நடந்த லீக் போட்டியில் புனே, சென்னை அணிகள் மோதுகின்றன. முதல் பாதியில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை.

இரண்டாவது பாதியில் வது நிமிடம் அடில் கான் தனது கையால், நெல்சனை தள்ளிவிட, சென்னை அணிக்கு ‘பெனால்டி’ வாய்ப்பு கிடைத்தது. இதை ரெனே வீணடித்தார். போட்டியின் 83 வது நிமிடம் எதிரணி வீரரை ஏமாற்றி பந்தை கொண்டு சென்ற கிரிகரி நெல்சன், கோல் அடித்து அசத்தினார்.

முடிவில், சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து, சென்னை அணி 10 போட்டியில், 6 வெற்றியுடன் (2 தோல்வி, 2 ‘டிரா’), 20 புள்ளிகள் பெற்று, மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.

Leave a Response