எ.கே.எம். நிறுவன தலைவர் காசிநாதத்தேவர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் .
திருவாருர் எ.கே.எம். குரூப் நிறுவனங்களின் தலைவர் அய்யா எ.கே.எம். காசிநாத தேவர் அவர்களின் மறைவு காவிரி டெல்டா விவசாயிகளுக்கும், வளர்ச்சிக்கும் பேரிழப்பு ஆகும். மிகச் சிறந்த மனித நேய பண்பாளர்,சிறந்த அர்ப்பணிப்பு உணர்வுமிக்க சேவையாளர்.மாவட்ட தலைநகரமாக அறிவிக்கப்பட்டது முதல் திருவாரூர் நகர வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாய குடும்பத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு சிங்கப்பூர் நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்கி பல குடும்பங்களின் வளர்ச்சிக்கு உதவியவர்.அவரது மறைவு காவிரி டெல்டா விவசாயிகளுக்கும், வளர்ச்சிக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும், எ.கே.எம். நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.