தேசியவிருது பெற்ற  இயக்குநரின் மூன்றாவது படத்தில் இணையும் சமுத்திரக்கனி – சசிகுமார் ஜோடி…

sasi

‘குக்கூ’ படத்தின் இயக்குநர் ராஜூ முருகன் இயக்கும் மூன்றாவது  படத்தில் சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார் ஆகிய இருவரும் மீண்டும் இணையவுள்ளனர்.

பத்திரிக்கையாளராக இருந்து இயக்குனராக மாறியவர் இயக்குனர் ராஜூ முருகன். குக்கூ படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த இயக்குனராக அனைவரிடமும் பறைசாற்றியவர்.

‘குக்கூ’ படத்தைத் தொடர்ந்து தேசிய விருது பெற்ற “ஜோக்கர்” படத்தைக் கொடுத்து அதிரவைத்தவர்.

தற்போது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கமகன் மாரியப்பனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் வசனம் எழுதி இருக்கிறார். இப்படி பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ள ராஜூ முருகனின் மூன்றாவது படம் ஒன்று உருவாகவுள்ளது.

இந்தப் படத்தில், நடிகர் சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமுத்திரகனி மற்றும் சசிகுமார் இருவரும் இணைந்து நடித்த படங்களும், ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி இயக்கிய படங்களும் வெற்றிப் பெற்று மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன்.

இந்தநிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இணையப்போகும் படத்திற்கு இயக்குநர் புகழ்பெற்றவர் என்பது ஹாட்ரீக் பிளஸ் ஆக அமைந்துள்ள

Leave a Response