கன்னியாகுமரி மாவட்டத்தில் பகவதியம்மன் கோவிலில் பன்வாரிலால் புரோஹித் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலையஸ்வாமி கோவிலுக்கு சென்று ஸ்வாலி தரிசனம் செய்துள்ளார்.
புயல் பாதித்த இடங்களையும் அவர் பார்வையிடுகிறார். நெல்லை மாவட்டத்தில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு நேற்று இரவு கன்னியாகுமரி வந்தடைந்தார்.
ஆளுநர் வருகையால் கன்னியாகுமரியில் இன்று அதிகாலை முதல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து கன்னியாகுமரி அரசாங்கம் விருந்தினர் மாளிகையில் சிற்றுண்டி அருந்திவிட்ட பின், சுசீந்திரத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார். இதனையடுத்து
இந்நிலையில் ஆளுநரின் பயண திட்டங்கள் அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இன்று மாலை 3 மணி அளவில் கன்னியாகுமரியில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோயம்பத்தூரில் வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஆளுநர், நெல்லையில் ஆலோசனை கூட்டங்களுடன் பொதுமக்களிடம் புகார் மனு பெற்றார்.
இந்நிலையில் கன்னியாகுமரி அவர் செல்லும் இடங்களிலும் கூட பொதுமக்களிடம் மனுக்கள் பெற கூடலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.