இயக்குநர் சசிகுமார் உறவினர் தூக்கிட்டு தற்கொலை!

eae2177e-3f26-44ff-86ee-2619739762f6

இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 40 வயது நிரம்பிய இவர் ஆற்காடு சாலை வளசரவாக்கம் lancor apparent -ல்   தற்கொலை செய்து கொண்டார்.

 

பிரபல இயக்குனர் சசிகுமாரின் அத்தை மகன் அசோக் என்பவர் இன்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இந்த தற்கொலை சம்பவம் ஆற்காடு சாலை வளசரவாக்கம் lancor apparent -ல்  இருக்கும் அவரது வீட்டில் நடந்து இருக்கிறது.
இறந்த அசோக்குமார் இணை தயாரிப்பாளர் மற்றும் கம்பனி புரொடக்‌ஷன் அலுவலக நிர்வாகி.

 

கடன் பிரச்சனையால் ஏற்பட்ட மன உளைச்சலோடு இருந்ததாகவும் கடன் கொடுத்த நபர் மிரட்டி தொல்லை கொடுத்ததால் அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தகவல். தமிழ் சினிமாவின் முக்கிய பைனான்சரான மதுரை அன்பு என்பவர் கொடுத்த டார்ச்சரால் தான் அசோக் தற்கொலை செய்துகொண்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
போலீசார் அந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்ன கோணத்திலும் போலீசார் விசாரணையை துவக்கியிருக்கின்றனர்.

தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிய கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது.
1bc2dd46-d09c-4038-bff3-46521d373122
24f43d40-512c-4d50-b4b4-1f1b7913ff09

Leave a Response