மு.க.ஸ்டாலினை டிவிட்டரில் விமர்சித்த பாஜக தலைவர்!

bjp

மத்திய பாஜக அரசு உள்நோக்கத்துடன் செயல்பட்டால், தமிழகத்தில் காலூன்ற முடியாது என்றார் திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் நேற்று கூறியிருந்தார்.

நெல்லை மேற்கு மாவட்ட திமுக சார்பில், முப்பெரும் விழா பொதுக்கூட்டம், பாவூர்சத்திரம் ஆர்.கே.நகரில் நேற்று நடைபெற்றது. அதில், மு.க.ஸ்டாலின் பேசியது:
வருமான வரி துறையினர் சோதனை நடத்தியதன் நோக்கம் மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும் என்பதே. ஆனால், மத்திய பாஜக அரசு உள்நோக்கத்துடன் செயல்படுமானால், அக்கட்சி தமிழகத்தில் காலூன்ற முடியாது என்றார்.

இதற்கு தமிழிசை சௌந்தரராஜன் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிலை பதிவிட்டுள்ளார். அதாவது, தமிழகத்தில் பாஜக கை ஊன்றக்கூட முடியாது.. ஸ்டாலின் கீழே விழுந்தால்தானே கை ஊன்ற?

ஆழவிதை ஊன்றி வேர்கள் பரப்பி ஆல்போல் தழைத்து விழுதுகள் பதித்து வளர்வோம் என்று கூறியுள்ளார்.

Leave a Response