கமல் டுவிட்டர் பதிவுகளுக்கு தமிழக பாஜக தலைவர் கிண்டல்!

Kamal-Haasan

கமலின் டுவிட்டர் பதிவு காரணமாக பல்வேறு சர்ச்சைகளுக்கும் அவர் ஆளாகி வருகிறார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் பல அரசியல் செய்திகளையும், சமூக நல செய்திகளைப் பற்றியும் தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். அது மக்களிடையே வரவேற்பை பெற்று வரும் நிலையில், கமலின் டுவிட்டர் பதிவுகளைப் புரிந்து கொள்ள கடினமாக உள்ளதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கமல் நேற்று டுவிட்டரில், ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக் கூடாது. மக்கள் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆக வேண்டும். மக்களே நடுவராக வேடும். விழித்தெழுவோம் தயவாய் என அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். கமலின் இந்த பதிவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

tamizsai

இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசனின் டுவிட்டர் பதிவு பற்றி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் இதேபோன்ற ஒரு கருத்தை கூறியுள்ளார்.

கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் புரியாதது போலவே கருத்துக்களை பதிவிட்டு வருவதாகவும், டுவிட்டர் பதிவுகளைப் புரிந்து கொள்ள கோனார் உரை வந்தால் நன்றாக இருக்கும் என்றும் அவர் கிண்டல் செய்யும் தொணியில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response