அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் இன்று மாபெரும் போராட்டம்!

vivasayi

கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். எனினும் போராட்டங்களுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இதனால் அங்கிருந்து சென்னை திரும்பினர்.

இதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் டெல்லியில் போராட்டம் நடத்தினர். அப்போது பிரதமரை சந்திக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததால் சென்னை திரும்பினர்.

delli1

இந்நிலையில் காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைப்பது, உற்பத்தி விலையில் 50 சதவீத விலை நிர்யணம், சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் இன்று டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் அனைத்து மாநில விவசாயிகள்  மாபெரும் போராட்டத்தை நடத்தவுள்ளனர். இருந்து அய்யாக்கண்ணு மற்றும் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

 

Leave a Response