ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி 18 பேர் உயிரிழந்தனர். விஜயவாடாவை அடுத்த இப்ராஹிம் பட்டணம் என்ற இடத்தில் உள்ள கிருஷ்ணா நதியில் சுற்றுலாப் பயணிகள் 38 பேர் தனியாருக்குச் சொந்தமான படகில் சென்றனர்.
அவர்கள் சென்ற படகு அதிக பாரம் தாங்காமல் ஆற்றில் கவிழ்ந்தது. இதில், சுற்றுலாப் பயணிகள் அனைவரும் நீரில் தத்தளித்தனர். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 19 ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, விபத்து நடந்த கிருஷ்ணா நதி பகுதியை ஆய்வு செய்து வருகிறார்.