இதுபற்றி மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறுகையில்:-
”கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக சாகுபடி பாதிக்கப்பட்டது. அதுபோலவே மஹாராஷ்டிராவில் கால தாமதமாக அறுவை நடந்து வருவதால் வெங்காயம் மற்றும் தக்காளி சந்தைக்கு வருவது தாமதமாகியுள்ளது. வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. பருவகால பாதிப்பால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இது தற்காலிகமானதே. அடுத்த இரு வாரங்களில் நிலைமை சீரடையும், விலை குறைந்து விடும்” எனக் கூறினார்.