இன்று மதியம் தொடங்குகிறது முதல் டி-20 போட்டி!

DKfIZyaXoAAvvBk_17513_09135

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 5-ஒருநாள் போட்டி தொடரை 4-1 என இழந்தது. இந்நிலையில் இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது.

இரு அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி இன்று முன்னாள் கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் துவங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ந்து 4 போட்டியில் அரைசதம் அடித்து அசத்திய இந்திய துவக்க வீரர் ரகானே வாய்ப்பளிக்கப்படாத்தால் தொடக்க ஆட்டக்காரர்களாக தவானும்- ரோகித் சர்மாவும் களமிறங்குகிறார்கள்.

10

அதுமட்டுமின்றி முதல் டி-20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பங்கேற்பது சந்தேகம் என தெரிகிறது. இப்போட்டிக்காக ராஞ்சியில் நடந்த பயிற்சியில் பங்கேற்ற போது ஸ்டீவ் ஸ்மித்திற்கு தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு இவருக்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. இதில் பெரிய அளவில் காயமில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இவர் முழுமையாக குணமடைந்தால் மட்டும் ராஞ்சி போட்டியில் பங்கேற்பார் என அந்த அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே முதலில் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பங்கேற்பது சந்தேகம் என தெரிகிறது.

முதல் டி20 போட்டி இன்று மதியம் 1.30-மணியளவில் தொடங்க உள்ளது. ஏற்கனவே ஒரு நாள் தொடரை இழந்துள்ளதால் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் டி20 தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இருக்கிறார்கள்.

இந்திய அணி: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்டிக் பாண்டியா, லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, எம்.ஸ். தோனி, கேதார் ஜாதவ், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்த்ர சஹால், ஆஷிஷ் நெஹ்ரா, புவனேஸ்வர் குமார், ஜேஸ்ப்ரிட் பும்ரா.

 

Leave a Response