பேன், பொடுகு நீக்கும் அரைக் கீரை! ஆச்சரியத் தகவல்

Arai-Keera

அரைக் கீரையின் மருத்துவப் பயன்கள்

1. அரைக் கீரைத் தண்டுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் தயாரித்து, தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் சளி, இருமல் மற்றும் நுரையீரல் தொடர்பான கபநோய்கள் குணமாகும்.

2. அரைக் கீரையுடன் மிளகாய் வற்றல், சிறு பருப்பும் மிளகு ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவைத்து, சாற்றை வடித்து, காய்ச்சல் உள்ளவருக்குக் கொடுத்தால் காய்ச்சல் உடனே மறையும்.

3. அரைக் கீரையுடன், சுக்கு, இஞ்சி, மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் குளிர் சன்னி, வலிப்புநோய் போன்றவை குணமாகும்.

4. அரைக் கீரையுடன், குடைமிளகாய், கசகசா, தேங்காய்ப் பால் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர, காமம் அதிகரித்து அளவில்லா கலவிச் சுகம் உண்டாகும்.

5. அரைக்கீரை வேர், நில வேம்பு, சிறிது மஞ்சள் மூன்றையும் சேர்த்துக் கஷாயமாக வாய் கொப்பளித்தால் பல்வலி, பல் கூச்சம் போன்ற பல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

6. அரைக்கீரைச் சாற்றில் மிளகு ஊறவைத்து உலர்த்தித் தூளாக்கி தினமும் 5 சிட்டிகை அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் கை, கால் நடுக்கம், நரம்புத் தளர்ச்சி போன்றவை சரியாகும்.

7. அரைக் கீரையை சிறு பருப்பு சேர்த்து தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரித்து ரத்தசோகை மறையும்.

keerai

8. அரைக் கீரை சாற்றில் சீரகத்தை ஊறவைத்து உலர்த்தி எடுத்து, பிறகு எலுமிச்சைச்சாற்றில் ஊறவைத்து உலர்த்தி எடுத்து தூளாக்கிக்கொள்ளவும். காலை, மாலை இரு வேளையும் 2 கிராம் அளவில் (அரை ஸ்பூன்) சாப்பிட்டால் வாத, பித்த, கப அதிகரிப்பால் எற்படும் பாதிப்புகள் மூற்றிலும் குணமாகும்.

9. அரைக் கீரைச் சாறு எடுத்து, அதில் வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வர, பேன், பொடுகு, நீங்கி முடி நன்கு வளரும்.

10. அரைக் கீரைச் சாற்றில் ஒரு ஏலரிசியை (ஏலக்காய் விதை) சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும்.

தகவல்: சித்த மருத்துவர் Aadhavan Siddhashram அருண் சின்னையா

Leave a Response