சென்னை வந்தார் ஆளுநர்; பிரேக்கிங் நியூஸ் எதிர்பார்க்கிறது தமிழகம்!

eps

தமிழக அரசியல் களம் மிகவும் பரபரப்பான சூழலில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்துள்ளார்!

இன்று மாலை அவரை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநரை முதல்வர் சந்திக்கவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழக அரசியல் சூழல் குறித்து ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கையும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து பேசியபின் சென்னை வந்திருப்பது குறிப்பிடத்தக்கது!

ஆகக்கூடி இன்று மாலை ஏதேனும் பெரிய பிரேக்கிங் நியூஸ் வரலாம்!

Leave a Response