இந்து மக்கள் கட்சித் தலைவரின் மனைவி தற்கொலை முயற்சி; சிகிச்சைக்கு அனுமதி!

Arjun sampath

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத். இவரின் மனைவி சுப்பு ரெத்தினம்.

சுப்புரெத்தினம், கோவை குறிச்சியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர்.

அர்ஜுன் சம்பத் – சுப்பு ரெத்தினம் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஓம்கார் பாலாஜி, என்ஜினியரிங் படித்து வருகிறார். இளையமகன் பள்ளிப் படிப்பைத் தொடர்கிறார்!

சுப்புரெத்தினத்துக்கும் மகன் பாலாஜிக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் விரக்தியடைந்த சுப்புரெத்தினம் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையறிந்த அருகில் இருந்தோர், சுப்புரெத்தினத்தை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுப்புரெத்தினத்துக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Leave a Response