குதிரை பேரம் பேசியதால் நடந்த கோரம்- கமல்ஹாசன் குற்றச்சாட்டு!

kamil 1

மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால், மாணவி அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களை திருவனந்தபுரத்தில் சந்தித்த நடிகர் கமலஹாசன், நீட் தேர்வுக்காக வாதாட வேண்டியவர்கள் பேரம் பேசியதால் வந்த சோதனை எனவும், அரசுக்கு நாங்கள் பாடம் கற்றுக்கொடுப்போம் எனவும் தெரிவித்தார்.

மாணவி அனிதா தற்கொலைக்கு நியாயம் கிடைக்க அனைவரும் போராட வேண்டும் எனவும், தமிழகத்தின் நலன் காக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பிட்டார்.

anitha1

மாணவி தற்கொலை போன்ற துயர சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது எனவும், சாதி கட்சி கடந்து நியாயத்திற்காக போராட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Leave a Response