விவேகம் படத்தில் ‘நெவர் எவர் கிவ் அப்’ (Never ever give up) வசனம் உருவானது எப்படி?

siruththai 2
தென்னிந்தியா சினிமாவில் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் முக்கியமான படங்களிலொன்று அஜித் குமார், காஜல் அகர்வால் , விவேக் ஓபராய் மற்றும் அக்ஷரா ஹாசன் நடிப்பில், சிவாவின் இயக்கத்தில் , சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி உலகமெங்கும் நாளை கோலாகலமாய் ரிலீஸாகவுள்ள ‘விவேகம்’. அஜித்துடன் சேர்ந்து ‘வீரம்’ மற்றும் ‘வேதாளம்’ போன்ற வெற்றி படங்களை தந்த இயக்குனர் சிவா ‘விவேகம்’ படத்தை பற்றி மிகுந்த நம்பிக்கையோடும் துள்ளலோடும் உள்ளார்.

‘விவேகம்’ குறித்து இயக்குனர் சிவா பேசுகையில்:-

“கிராமப்புற பின்னணியில் ‘வீரம்’, நகர பின்னணியில் ‘வேதாளம்’ இந்த படங்களுக்கு பிறகு ஒரு சர்வதேச படம் ஒன்று பண்ணலாம் என்ற யோசனையை அஜித் சார் தான் கொடுத்தார். இந்த கதையை நான்கு மாதங்களில் தயார் செய்தோம்.’விவேகம்’ படத்தில் ஆக்ஷனுடன் சேர்ந்து சரியான கலவையில் எமோஷன்களும் உள்ளன.பல்கெரியா, சைபீரியா,க்ரோஷியா, ஸ்லோவேனியா மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடத்தினோம். அஜித் சார் மாபெரும் மனிதர் என்பது மட்டுமில்லாமல் அசுர உழைப்பாளி. இப்படத்தில் மூன்று பெரிய ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. இப்படத்தில் சண்டை காட்சிகளுக்கு ‘டூப்’ போடாமல் அஜித் சார் செய்த ஒரு அசுர பைக் ஸ்டாண்டை பார்த்த அதனை இயக்கிய ஹாலிவுட் சண்டை இயக்குனர் காலோயன் வொடெனிசரோவ் [ Kaloyan Vodenicharov ]அசந்து போய் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார், ஏனென்றால் அந்த ரோடு பனியிலும் மழை நீரிலும் ஊறி வழுக்களாகவும் அபாயகரமாகவும் இருந்தது.

இந்த படத்துக்காக அஜித் சார் ஜிம்மூக்கு மாதக்கணக்கில் சென்று கடும் உழைப்பு போட்டு தன் உடலை செதுக்கியுள்ளார். அதுமட்டுமல்லாது அவர் கடைபிடிக்கும் அவரது வாழ்க்கை தத்துவமான ‘Never Say Die’ வை மையமாக வைத்தே இப்படத்தில் ‘நெவர் எவர் கிவ் அப்’ (‘Never ever give up’) என்ற வசனத்தை எழுதினோம். உண்மையான உழைப்பு தரும் பெயரும் வெற்றியும் வேறு ஏதுவாலும் தர முடியாது. எங்கள் முழு அணியும் இரவு பகல் பார்க்காமல் கடும் உழைப்பும் அர்ப்பணிப்பும் போட்டுள்ளது. அதனால் இப்படம் மிக அற்புதமாக வந்திருப்பதில் எங்களுக்கு ஆச்சிரியம் இல்லை. ஆகஸ்ட் 24 ஆம் தேதியை குதூகலத்தோடு எதிர்நோக்கியுள்ளோம். இது ஒரு கோலாகல பண்டிகை வாரமாக இருக்கும் என நம்புகிறோம்”.

Leave a Response