மக்கள் அரசியலில் ஆர்வத்தை காட்டியிருந்தால் நாடு முன்னேறியிருக்கும்! பாடகியின் கருத்து

chinmayi

அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய அணிகள் தங்களுடைய கருத்து வேறுபாடுகளை நீக்கி இணைந்திருக்கிறார்கள். இந்த அரசியல் மாற்றம் குறித்து பலரும் தங்களுடைய கருத்துகளை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பாடகி சின்மயி அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் போட்டியாளர்களை அவமானப்படுத்த நினைக்கும் நம் மக்கள், அதே ஆர்வத்தை அரசியலிலும் காட்டியிருந்தால் நாடு முன்னேறியிருக்கும். நாட்டை ஆள்கிறவர்களை எந்த கேள்வியும் கேட்க முடியவில்லையா, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி போட்டியாளரைத் திருத்தி, அவரை அவமானப்படுத்துவதில் என்ன பயன்? என்று சின்மயி தெரிவித்துள்ளார்.

Leave a Response