தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் திடீரென நிருபர்களை தலைமை செயலகத்தில் சந்தித்தார்.
இந்த சந்தப்பில் ஜெ., மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என அவர் நிருபர்களிடம் தெரிவித்தார். முன்னதாக அவர் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
சசிகலா குடும்பதை ஒதுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளர்.
அவர் வெளிட்டுள்ள அறிக்கை:-
முன்னாள் முதல்வர் ஜெ., உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி 05. 12.2016 ல் இறந்தார். இது பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும். நீதிபதி யார் என்பது பின்னர் அறிவிக்கப்படும். பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வந்ததை அடுத்து இது அறிவிக்கப்படுகிறது. தமிழகத்தின் முதல்வராக அரும்பாடு பட்ட ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டனில் உள்ள வேதா நிலைய இல்லம் அரசுடமையாக்கப்படும்.
இது மக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஓ.பி.எஸ். முதல்வராக இருந்த போது ஜெ.மரணம் கூறித்து நீதி விசாரணை வேண்டும். போயஸ்கார்டன் இல்லம் அரசுடமையாக்கப்பட வேண்டும் என கேரிக்கை வைத்து இருந்தார். ஆனால் அவருடைய முதல்வர் பதவிற்கு எடப்பாடி பழனிசாமி வந்தவுடன் சசிகலா அணியுடன் சேர்ந்து இதை கண்டு கொள்ளாமல் இருந்தார். தற்ப்போது தமிழக அரசியல் குழப்பம் காரணமாக சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து ஒதிக்கிவிட வேண்டும் என முடிவு செய்துள்ளார். ஓ.பி.எஸ். அணியுடன் இணைய வேண்டும் என்றால் அவர்கள் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும்.
சசிகலா குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வைத்த ஆப்பு!
இரு அணிகள் இணைவதற்கு முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
Political