சுதந்திர தினவிழாவில் கடலை மிட்டாய் வழங்கிய பள்ளி!

kadalai-mittai
தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர  தின விழா நடைபெற்றது. சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் வழங்கப்பட்டது.

“கடலை மிட்டாய் ஆரோக்கியத்துக்கு உகந்தது. ஆகவே எங்கள் பள்ளியில் சுதந்திரதின விழா, குடியரசு நாள் போன்ற விழாக்களின்போது கடலைமிட்டாய் வழங்கிவருகிறோம்” என்றார் பள்ளியின் தலைமையாசிரியர் லெ. சொக்கலிங்கம்!

இந்த பள்ளி பின்பற்றும் நல்ல விஷயத்தை மற்ற பள்ளிகளும் நடைமுறைப்படுத்தலாமே!

Leave a Response