ஒடிசா மாநிலத்தில் நிலவிய உச்சக்கட்ட வெயிலின் உக்கிரத்தில் ஒருவர் ஆம்லெட் சமைத்த வீடியோ வைரல்…

aamlet
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில் பகல் நேரங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரிக்கு மேல் பதிவாகியதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வெப்ப நிலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஒடிசா மாநிலம் தித்லாகரில் நேற்று அதிகபட்சமாக 113 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. ஒடிசாவில் நிலவும் இந்த கோர வெப்ப நிலைக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையில், இந்த கொளுத்தும் வெயிலில், ஒருவர் சாலையோரம் கடாயை வைத்து, அதில் முட்டையை உடைத்து ஊற்றியபோது, சிறிது நேரத்தில் அது ஆம்லேட்டாக மாறியது. இது தொடர்பான வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Response