தண்ணீர் தொட்டி கழுவும் போது தவறி விழுந்து இறந்தவரை, வலிப்பு வந்து விழுந்து மரணம் என திசை திருப்ப முயற்சியா???

Impress India
சென்னை முகப்பேர் கிழக்கு தொழிற்பேட்டையில் உள்ள இம்ப்ரெஸ் இந்தியா என்கிற பிரிண்டிங் கம்பெனியில் பணிபுரியும் திரு.மோகன் என்பவர் இன்று காலை சுமார் 10:15 மணியளவில் அந்த தொழிற்சாலையிலுள்ள தண்ணீர் தொட்டியை சுத்த செய்யும் போது மேலேயிருந்து தவறி கீழே விழுந்ததில் அவருடைய தலை பிளந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இறந்த மோகன சுமார் 40 வயதுடையவர். அவருக்கு திருமணமாகி அவருடைய மனைவி மற்றும் ஒரு 9 வயது மகனுடன் வாழ்ந்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்து சம்பவத்தை பற்றி 108’க்கு தெரிவிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் வந்து விபத்தில் அடிப்பட்ட மோகனை பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் இச்சபவம் அறிந்த நுளம்பூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து செய்தனர். தற்போது நுளம்பூர் காவல் நிலையத்தில் காவல்துறையினர் ‘இம்ப்ரஸ் இந்தியா’ அதிகாரிகளிடமும் இறந்து போன மோகன் அவர்களின் மனைவியிடமும் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் பற்றி விசாத்தபோது, இறந்து போன மோகன் அவர்களுக்கு அவ்வப்போது வலிப்பு வரும் என்று சொல்லப்படுகிறது. அதே போல் இப்போதும் அவர் தொட்டி சுத்தம் செய்யும் போது அவருக்கு வலிப்பு வந்து மேலேயிருந்து கிழே விழுந்துவிட்டதாக ஒத்துக்கொள்ளும்படி அவர் பணியாற்றும் நிறுவனத்தின் அதிகாரிகளும், காவல் துறையினரும் அவருடைய மனைவியை வற்புறுத்துவதாக நம்பத்தகுந்த வாட்டரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Response