லாரன்ஸ் தன் தாய்க்கு கட்டிய கோவிலை திறந்து வைத்த லாரன்ஸின் சினிமா ஆசான்…

IMG_1615
ராகவா லாரன்ஸ் தனது அம்மாவிற்கு கட்டிய கோவிலை அன்னையர் தினமான இன்று காலை 8.15 மணியளவில் நடிகரும் ஸ்டான்ட் மாஸ்டருமான சூப்பர் சுப்ராயன் அவர்கள் திறந்துவைத்தார். லாரன்ஸ் அவர்களின் தாயார் அமர்ந்து கொண்டு தியானம் செய்வதை போன்ற சிலை இந்த புதிய கோவிலில் நிறுவப்பட்டுள்ளது. ராகவா லாரன்ஸ் அவர்கள் முதல் முதலில் ஸ்டான்ட் மாஸ்டர் சூப்பர் சுப்ராயனிடம் உதவியாளராக பணிக்கு சேர்ந்தார். லாரன்ஸ் அவர்களுக்கு நடனத்தில் மிகுந்த ஆர்வம் இருந்ததினால் சூப்பர் சுப்ராயன் அவர்கள் லாரன்ஸ் நடனம் பயிற்சி பெறுவதற்கு உதவி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவில் திறப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சுப்புராயன், சிவலிங்கா படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர், மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் இயக்குனர் சாய்ரமணி மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Leave a Response