தமிழ் சினிமாவில் தன் திறமையால் கஷ்டப்பட்டு தற்போது முன்னுக்கு வந்திருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் ஆரம்பத்தில் தனது நடன அமைப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கி, இன்று, முன்னணி நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக, நல்ல டான்ஸராக, தாய்க்கு நல்ல மகனாக உயர்ந்துள்ளார். சினிமா தவிர்த்து நிறைய நலத்திட்ட உதவிகளையும் தனது அறக்கட்டளை மூலமாக செய்து வருகிறார்.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் சென்னை, அம்பத்தூர், ராகவேந்தர் கோயில் அருகே தன் அம்மா கண்மணிக்கு கோயில் ஒன்றை கட்டியுள்ளார்.தனது இந்தக் கோயிலை அன்னையர் தினமான மே 14 ம் தேதி அன்று காலை 8 மணிக்கு ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் திறந்து வைக்கிறார். ஆரம்ப காலத்தில் லாரன்ஸ் கஷ்டப்பட்ட போது ஆதரவு கரம் நீட்டியவர் சூப்பர் சுப்பராயன் என்பதால் அவரை வைத்து சிலையை திறக்கிறார்.
மேலும் இந்த விழாவில் வயது மூத்த ஆயிரம் தாய்மார்களுக்கு சேலையும், ஆறு விவசாய பெண்களுக்கு தாலியை மீட்டு தரும் நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது. அன்னையர் தினத்தன்று அன்னைக்கு கோயில் திறந்து உலகில் உள்ள எல்லா அன்னையருக்கும் சமர்ப்பிக்க உள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.