டெல்லியில் 1000 குழந்தைகள் மயக்கம்..

cheild
டில்லியில் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட வாயு கசிவால் பாதிக்கப்பட்டு, 1000 குழந்தைகள் மயக்கமடைந்துள்ளனர்.
டில்லி துல்லக்பாத் பகுதியில் விடுதி வசதியுடன் கூடிய பள்ளி இயங்கி வருகிறது. இதில் கெமிக்கல் கன்டெய்னரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 1000 குழந்தைகள் மயக்கமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார், ஆம்புலன்சுடன் சென்று குழந்தைகளை மீட்டனர்.

பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வாயு கசிவு தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு கருதி பள்ளியில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Leave a Response