122 எம்.எல்.ஏ.க்களும் கொத்தடிமைகள் தான் என்று கூறும் சூலூர் எம்.எல்.ஏ !…

kanagaraj
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் நேற்று அளித்த பேட்டி: கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலையில் ஆட்சிக்கும், கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி அரசின் கவனக்குறைவே இதற்கு காரணம். எடப்பாடி அணியுடன் இணைவதற்கு பன்னீர்செல்வம் ஆர்வமாக உள்ளார்.

ஆனால், அவருடன் இருக்கும் பதவியில் இல்லாத சில மாஜி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள்தான் இரு அணியும் இணைவதற்கு தடையாக உள்ளனர். சசிகலாவையும், தினகரனையும் எடப்பாடி அணியினர் அனைவரும் கும்பிட்டார்கள். சசிகலாவை முதலமைச்சராக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் சொல்லவேயில்லை. அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்றும் கூறவில்லை.

அதேபோல் டி.டி.வி. தினகரனுக்கு ஆர்.கே. நகர் தொகுதியில் சீட் தருவதற்கும் எங்களிடம் கேட்கவில்லை. 122 எம்எல்ஏக்களில் நானும் ஒருவனாக உட்கார்ந்திருந்தேன். எல்லாவற்றும் கையெழுத்து போட சொன்னார்கள், போட்டோம். இப்போது எடப்பாடி அணி சசிகலாவையும், தினகரனையும் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்கிறார்கள்.

இந்த கட்சியில் எந்த ஒரு விசயத்திற்கும் எங்களை அவர்கள் கேட்பதேயில்லை. அவரவர்களுக்கு சாதகமாக ஒரு குரூப் செயல்படுகிறது. வேறு வழியில்லாமல் 122 எம்.எல்.ஏ.க்களும் அவர்களுக்கு கொத்தடிமைகளாக இருக்கும் சூழ்நிலை தான் உள்ளது.

இதனால் வரையிலும் அமைதியாக இறந்து விட்டு திடிரென இப்படி கூருவதன் நோக்கம் என்ன திரு o.பான்னீர் செல்வம் உங்களிடம் வந்து இவர்களை பற்றி தெரிவிக்க வந்தபோது நீங்கள் எல்லோரும் அவரை சந்திக்கவில்லை ஏன். இப்பொழுது நீங்கள் மட்டும் எதிர்த்து நின்றால் கட்சியில் குழப்பம் தீர்ந்து விடுமா. மேலும் 122 எம்.எல்.ஏ க்களும் சுதந்திரமாக செயல்படுவார்களா.

Leave a Response