குத்துவிளக்கை அவமதித்த வைரமுத்து…

Vairamuthu & Thanu
அறிமுக இயக்குனர் ஜெகன்சாய் புதியதாக இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜெட்லீ’. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது.

விழாவின் ஆரம்பமாக குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. முதலாவதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் குத்துவிளக்கை ஏற்றினார். பின்னர் கவிஞர் வைரமுத்து, ஜாகுவார் தங்கம் மற்றும் சிலர் குத்துவிளக்கை ஏற்றினர்.

இந்த குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வின் போது, குத்துவிளக்கின் மரியாதை அறிந்து கலைப்புலி எஸ்
தாணு, ஜாகுவார் தங்கம் ஆகியோர் தங்களுடைய காலனியை கழற்றிவிட்டு குத்துவிளக்கை ஏற்றினார். கவிஞர், எழுத்தாளர், தமிழ் பற்றாளர் என சொல்லிக்கொள்ளும் வைரமுத்து அவர்கள் தான் அணிந்து வந்த காலனியுடனே குத்துவிளக்கை ஏற்றி தமிழ் கலாச்சாரத்தின் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வை அறவே அவமதித்துள்ளார்.

இனி வரும் காலங்களிலாவது வைரமுத்து அவர்கள் குத்துவிளக்கின் பெருமை அறிந்து காலணிகளை கழட்டிவிட்டு ஏற்றினால் சற்று மரியாதையாக இருக்கும்.

Leave a Response