எடப்பாடி அணியும் ஒ.பி.எஸ். அணியும் ஒன்றிணையுமா???

eps-ops
தற்போது ஒ.பி.எஸ். அணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று கொண்டிருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி அவர்கள் அணியுடன் சேர்வதற்கான முடிவுகள் எடுக்கபோவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் தமிழக முதல்வர் எடப்பாடி அணியினர் சசிகலாவின் குடும்பத்தை கட்சியில் இருந்து விளக்குவதாக முடிவுசெய்தனர்.இதனையடுத்து ஒ.பி.எஸ். அணியினரும் எடப்பாடி அணியினரும் ஒன்றிணைவதற்கான பேச்சுவார்த்தைக்கு துவங்க போவதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆலோசிப்பதற்கு தற்போது ஒ.பி.எஸ். அணியின் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ கூட்டம் நடைபெற்று கொடிருக்கிறது.

மேலும் ஒ.பி.எஸ். அணித்தரப்பில் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் பேசுவதற்கான குழுவை தீர்மானம் செய்யப்படும் என் எதிர்பர்காபடுகிறது. அதுமட்டுமல்லாது பெச்சுவார்த்தைக்கு இடம்பெரப்போகும் நபர்களை குறித்து இன்று வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு அணியும் ஒன்று சேருமா அல்லது சேராத முடிவில் தமிழகத்தின் நிலையென்ன????????

Leave a Response