இரட்டை இலை சின்னம் எங்களுக்குரியது என்று கூறும் தம்பிதுரை

thambithurai
தமிழக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சசிக்கலா தலைமைலான ஆ.இ.அ.தி.மு.க.விற்கே இரட்டை இலை சொந்தம் என்று தெரிவித்துள்ளார். மக்களவை துணை சபநாயகர் தம்பிதுரை அவர்கள் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:

ஆர்.கே.நகரில் தி.மு.க.,விற்கு வெற்றி வாய்ப்பு இல்லாததால், மக்கள் நலக் கூட்டணி ஆதரவை எதிர்பார்க்கிறார்கள். ரேஷன் கடைகளில் தி.மு.க., போராட்டம் அரசியல் உள்நோக்கம் உடையது. நாங்கள் ஜெயலலிதா அவர்களின் வழியில் பயணிக்கிறோம். யார் உதவியும் நாடப்போவதில்லை. வருகின்ற தேர்தலில் வெற்றி எங்களுக்கு உறுதி. இரட்டை இலை சின்னம் சசிகலா தலைமையிலான ஆ.இ.அ.தி.மு.க. விற்கே சொந்தம் என்று கூறியுள்ளார்.

Leave a Response