“பாலியல் வன்கொடுமைகளை தடுக்க கோரி கையெழுத்து முகாமில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்”…

lakshmiramakrishnan

“கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இரண்டாம் நாளாக மாபெரும் முகாம் நடைபெற்று வருகிறது”

குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக்க கோரி மத்திய அரசுக்கு கொடுக்க “Green cross health Organization”,”Saisha Eucational and Charitabel Trust”,மற்றும் “தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம்” ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்போடும் சென்னையில் இரண்டாம் நாளாக “மாபெரும் கையெழுத்து இயக்கம் முகாம்” நடைபெறுகிறது.

பாலியல் வன்கொடுமைகளை தடுக்க கோரி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாபெரும் கையெழுத்து முகாமில் திரைப்பட இயக்குனரும், நடிகையுமான திருமதி.லட்சுமி ராமகிருஷ்ணன் வந்து கையொப்பமிட்டு அவரும் முகாமில் கலந்து கொண்டார்.

மேலும் மக்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு கையொப்பமிட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Response