தமிழகம் முழுவதும் தற்போது ரூபெல்லா தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்த பட்டு வருகிறது. இத்திட்டம் மேலும் 15 நாட்களுக்கு செயல்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படும். விடுப்பு இல்லாமல் தொடர்ந்து 15 நாட்களுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடப்படும்.
இதுவரை 77 லட்சம் குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறினார்.