பொது மக்களால் கல் வீசி விரட்டப்பட்ட கருணாஸ்….

Karunas
கலகலவென இருக்கிறது தமிழக அரசியல். யார் யாருக்கு ஆதரவு தருவது என தெரியாமல் குழம்பிப் போயி கிடக்கிறார்கள்.

சசிகலா ஜெயிலுக்கு போன நிலையில் கூவத்தூர் ரிசாட்டில் எம்.எல். ஏக்களுக்கு சகல வசதிகளும் செய்தது கருணாஸ் என ஊரே பரவிக் கிடக்கிறது.

கட்சி ஆரம்பித்த வேகத்தில் ஜெயலைதாவிடம் சீட்டு வாங்கி ஜெயித்து எம். எல். ஏ வான கருணாஸ் சசிகலாவிற்கு சப்போர்ட் செய்தது யாருக்கும் பிடிக்கவில்லை.
சசிகலா விற்கு எதிராக கடும் அதிருப்தி அலை நிலவி வருகிறது தமிழ்நாட்டில்.

இந்த நிலையில் ஆளும்கட்சி எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவளித்த எம்.எல்.ஏக்கள் மேல் மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

இந்த் நேரத்தில் திருவாடனை தொகுதியில் உள்ள தன் எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு சென்றுள்ளார் கருணாஸ்.

கோபத்தில் இருந்த பொது மக்கள் கருணாஸ் காரை முற்றுகையிட்டு கல் வீசி தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். தாக்குதல் நடத்தியவர்களில் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை மற்றும் தமிழர் முன்னேற்ற கழகம் கட்சியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்ந்து பொது மக்களும் நிறைய இருந்ததால் போலீஸ் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்திருக்கிறது. பொது மக்களின் இந்த தாக்குதலினால் கருணாஸ், தன் அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் திரும்பியிருக்கிறார்.

சினிமாவில் சம்பாதித்து நல்ல பெயருடன் இருந்தவருக்கு இது தேவையா என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

மக்கள் விழிப்படைந்து விட்டால் அரசியல்வாதிகளின் பருப்பு வேகாது என்பது உண்மையாகியிருக்கிறது.

Leave a Response