இயக்குனர் சேரன் பொன் ராதாகிருஷ்ணனுடன் திடீர் சந்திப்பு


cheran ponradhakrishnanஇயக்குனர் சேரன் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை திடீரென சந்தித்து பேசினார்.

இயக்குனர் சேரன் 10கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் தேசிய விருதும் பெற்றிருக்கிறார்.

இவர் புதிய படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும்படியாக ’சானல் டு ஹோம்’ என்ற நிறுவனத்தை தொடங்கினார். சென்னை நேரு ஸ்டேடியத்தில் துவக்கவிழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிறுவனத்தின் மூலம் ஜெ.கே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை வெளியிட்டார்.

லாபம் ஏதும் இல்லாததால் இந்த முயற்சியை கைவிட்டதாக கூறப்படுகிறது. சேரனிடம் பணம் கட்டிய பல முகவர்கள் சேரன் மீது பண மோசடி வழக்குப் பதிவு செய்தனர்.

வழக்கு நடந்துகொண்டிருக்கும் நிலையில் திடீரென மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூடிய விரைவில் நல்ல செய்தி வரும் எனற நம்பிக்கையில் இருப்பதாக கூறினார்.


 

Leave a Response