திமுக நடத்தும் கட்சிக் கூட்டம் அனைத்திலும் தமாகா பங்கேற்கும்; ஜி.கே. வாசன்


21th_vasan_1060397fகாவிரி விவகாரம் தொடர்பாக திமுக நடத்தும் கட்சிக் கூட்டம் அனைத்திலும் தமாகா பங்கேற்கும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமாகா தலைவர் ஜி.கே. வாசன், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டாதது வருத்தமளிக்கிறது. தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் கோரிக்கையை அரசு ஏற்றிருக்க வேண்டும்.

காவிரி விவகாரம் தொடர்பாக திமுக நாளை நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமாகா சார்பில் நானும் கட்சியின் முக்கியத் தலைவர்களும் பங்கேற்போம்.

தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில்  போட்டியிடுவது பற்றி நாளை மறுநாள் தமாகா அறிவிக்கும் என்றும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.


 

Leave a Response