ஜெயலலிதாவை பற்றி வதந்திகள் பரப்பியதாக ‘டிராஃபிக்’ ராமசாமிக்கு எதிராக வழக்குப் பதிவு


traffic-ramaswamyமுதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி வதந்தி பரப்பியதாக சமூக ஆர்வலர் ’டிராஃபிக்’ கே.ஆர்.ராமசாமி மற்றும் உதவியாளர் பாத்திமாவிற்கு எதிராக சென்னை போலீஸார் சனிக்கிழமை வழக்குகள் பதிவு செய்தனர்.

ஒரு உயர் போலீஸ் அதிகாரி பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றவியல் வழக்குகள் பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

போலீஸ் ஏற்கனவே சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செல்வி ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி வதந்தி பரப்பியதாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 

Leave a Response