சிறுவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய சரவணசெல்வரத்தினம் பள்ளி

12eb60dc-8a87-4da5-bad2-2413b808cffd

ஆத்தூர், அக்.18 (டி.என்.எஸ்) சென்னையில் பிரம்மாண்டமான ஆடையகம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை வியாபாரம் செய்து வரும் சரவண செல்வரத்தினம் நடத்தி வரும் பள்ளியின் தலைமை ஆசிரியர், அப்பள்ளியில் படிக்கும் யு.கே.ஜி மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் உள்ளது சண்முக சுந்தர நாடார் பள்ளி. இப்பள்ளியில் யு.கே.ஜி வகுப்பில் படித்து வரும், இரைட்டையர் சகோதர்கள், நேற்று (அக்.17) வீட்டு பாடம் செய்துவரவில்லை என்று தலைமை ஆசிரியர் கிருஜா இரண்டு சிறுவர்களையும் கொடூரமாக தாக்கியுள்ளார்.

 

மாணவர்களின் கால்களில் கம்பை கொண்டு தலைமை ஆசிரியர் தாக்கியதால், மாணவர்களின் கால்கள் வீக்கமடைந்து பட்டை பட்டை தழும்புகளாக சிவந்துள்ளது. வீடு திரும்பிய மாணவர்கள், தங்களது நிலையை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்கள். தற்போது சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது போலீஸில் புகார் கொடுக்க சிறுவர்களின் பெறோர்கள் முடிவு செய்துள்ளார்களாம்.

b9ba11af-aff0-4cdd-81e4-e757ea0d3999

இதில் என்ன கொடுமை என்றால், மாணவர்களின் அடையாள அட்டையில் ‘சண்முக சுந்தர நாடார்’ என்பதற்கு பதிலாக ‘சுன்முக சுந்தர நாடார்’ என்று பள்ளியின் பெயரை தவறுதலாக அச்சடித்து, அதை மாணவர்களிடமும் வழங்கிய பள்ளி நிர்வாகம், ஒரு நாள் வீட்டு பாடம் செய்யவில்லை என்பதற்காக, சிறுவர்கள் மீது இப்படி கொடூரமாக நடந்துக் கொண்டுள்ளது கேலி கூத்தாக உள்ளது.

Leave a Response