ஒரே இரவில் நடக்கும் ‘திகில்’ கதையில் மிரட்டும் ஷெரின்.. !

துள்ளுவதோ இளமை மூலம் ரசிகர்களை கிறங்கடித்த ஷெரின், முருகா’ அசோக் இருவரும் இணைந்து நடித்திருக்கும் படம் தான் ‘திகில்’.. ஒரே நாளில் ஒரு இரவில் நடக்கும் திகில் சம்பவங்கள் தான் படத்தின் கதையே. படத்தை சந்தோஷ் கொண்டேன்கேறி என்கிற கன்னட இயக்குனர் இயக்கியுள்ளார். ரவிகாளே முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தமிழ், கன்னடம், இந்தி மும்மொழிகளில் தயாராகியுள்ள இந்தப்படத்தில் அசோக் தமிழ், கன்னடம் என இரு மொழிகளிலும் கதாநாயகனாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஆஸ்லே என்னும் கன்னட இசையமைப்பாளர் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.