இரண்டு உயிர்களை பலி வாங்கிய ‘கத்தி’..!

‘கத்தி’ படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதற்காக இரண்டு உயிர்கள் இதுவரை பலியாகியுள்ளது தான் சோகம்.. சென்னை திருநின்றவூர் லட்சுமி தியேட்டரில் ‘கத்தி’ திரைப்படத்தை காண வந்த விஜய் ரசிகர்களின் நெரிசல், தள்ளுமுள்ளு காரணமாக நிகழ்ந்த விபத்தில் தியேட்டர் அதிபர் கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதேபோல இந்த தீபாவளி தினத்தன்று விஜய்யின் ‘கத்தி’ பட கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த வடக்கஞ்சேரியை சேர்ந்த ஸ்ரீ உன்னிகிருஷ்ணன் என்பவர் கீழே தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிகழ்வால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த விஜய் அந்த ரசிகரின் குடும்பத்துக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.